Rz Omar
உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.சிறு வயது வாழ்க்கை
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இத்தாலி நாட்டின் ஆதிக்கம் நிலைநாட்டியிருந்தபோது ஒரு பள்ளிக்கூட வயதான ஆசிரியர் ‘உமர் முக்தார்’ மக்களை தன் வீர உரையால் தட்டி எழுப்பி இத்தாலி நாட்டின் பலமிகுந்த படையினரை சரிசமமாக நின்று போரிட்டு, பின்பு இத்தாலி படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்.
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “
படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”
முசோலினி: ” யார் அவர்களை வழி நடத்துவது ?”
தளபதி: ” ஒமர் முக்தார் “
முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”
தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.
பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிற்சியோ, நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது). சங்கிலியால் பிணைக்கப் பட்டு நகரின் முச்சந்தியில் இழுத்து வந்து தூக்கிலிடப் படுமுன் தன் கையில் பிடித்திருந்த குர்ஆனை ஓதிவிட்டு பின் தன்னை தூக்குக் கயிறுக்கு இறையாக்கினார். அவரது மன உறுதி இத்தாலி நாட்டு அரசை கதிகலங்க வைத்து விட்டதோடு மட்டுமல்லாமல் லிபியா மக்களிடமே ஆட்சியினை ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.
Rz Omar
Ibn Taymiyah (may Allah
(glorified and exalted be He) have mercy on him) said:
“When I am confused in my understanding of an issue in religion, I forthwith beseech Allah to
“When I am confused in my understanding of an issue in religion, I forthwith beseech Allah to
forgive me one thousand times - maybe a little more or maybe a little less.
Then, Allah opens what was closed for me and I come to understand.”
Click to read more: http://productivemuslim.com/seeking-knowledge/#ixzz2Ldo4f1ib
Rz Omar
தற்போது பேஸ்புக் பக்கங்களிலும்,சமூக வலைதளங்களிலும் comedy,jolly,fun என்ற பெயரில் ஏதாவது சில புகைப்படங்களைப் பதிந்து அதில் உள்ளவர்கள் பேசுவது போலவே இவர்களாக வசனங்கள்
எழுதி like,comment,share செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல் பெரியமனுசத்தனமான வசனங்கள்.
மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற Photoshop செய்யப்பட்ட புகைப்படங்கள்......குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...என்ன கொடுமை?????
இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால் பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....
இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது.... ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???
மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல் கொடுமைப் படுத்துகிறோம்.... காரணம் காய்ச்சல் வருமாம்.....மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல் என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான் இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில் ஆட்டம் போடுகிறார்கள்.
இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........தனியா க வளரும்,யார் கூடவும் பழகாமல் இருக்கும் பிள்ளைகளை விட நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வெற்றி,தோல்வியை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்கிறார்களாம்.... முன்னொரு காலத்தில் நாமெல்லாம் பூந்தளிர்,அம்புலி மாமா,வாண்டு மாமா, சிறுவர் மலர் புத்தகங்களில் நிறைய கதைகள் படித்துள்ளோம்....அதில் நல்லவர்கள் பொறுமையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளையும்,பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு பிறர் உதவி செய்வார்கள் என்ற கருத்துகளும் நம் மனதில்
பதிந்தன......ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம் அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..
நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா???? இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய காலமெல்லாம் மலையேறி போய் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று விளையாடுகிறார்கள்.....
பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது வேதனைப் பட வேண்டிய விசயம்......வீடியோ கேம்,செல் போன் கேம் இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....
நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்.... இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட விளையாட அனுமதிக்கலாம்...... பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....
நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின் கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???
நன்றி-நேர்வழி
எழுதி like,comment,share செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல் பெரியமனுசத்தனமான வசனங்கள்.
மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற Photoshop செய்யப்பட்ட புகைப்படங்கள்......குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...என்ன கொடுமை?????
இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால் பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....
இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது.... ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???
மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல் கொடுமைப் படுத்துகிறோம்.... காரணம் காய்ச்சல் வருமாம்.....மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல் என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான் இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில் ஆட்டம் போடுகிறார்கள்.
இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........தனியா
பதிந்தன......ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம் அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..
நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா???? இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய காலமெல்லாம் மலையேறி போய் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று விளையாடுகிறார்கள்.....
பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது வேதனைப் பட வேண்டிய விசயம்......வீடியோ கேம்,செல் போன் கேம் இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....
நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்.... இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட விளையாட அனுமதிக்கலாம்...... பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....
நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின் கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???
நன்றி-நேர்வழி
Subscribe to:
Posts (Atom)

