From My Facebook கிறுக்கல்ஸ்

காதல் எனும் கடலில் முத்தெடுக்கும் சிலர் 
என்னைப்போல் தத்தளிக்கும் சிலர் #கவித 
#ஆத்தா நான் லவ் பெய்லியர் ஆகிட்டன்


அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி #exam#semester #studyLeave


எப்படி மூங்கிலில் இருந்து வரும் காற்று இசையாகிறதோ அதேபோன்று என் சிந்தனயில் இருந்துவரும் வார்த்தைகள் மொக்கையாகி விடுகின்றன

எகிப்த்தின் உறவுகளிடம் இருந்து

இலங்கையில் சில இனவாத சக்திகள் எமது முஸ்லிம் இளைஞர்களை இனவாதத்தினால் துண்டிவிட்டு அவர்களை ஆயுத கலாச்சாரத்தினுள் தள்ளிவிட்டு தீவிரவாத பட்டம் வழங்க முனையும் இந்த வேளையில் எகிப்த்தின் உறவுகளிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடம் அவர்களது சாத்வீக போராட்டமே.

கரண்டை காலுக்கு கீழ்


யார் பெருமைக்காக தனது கீழா டையை தரையில் படும் படி அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று நபியவர்கள் கூறியதும் பக்கத் திலிருந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் ஷயா ரஸூலுல்லாஹ்! நான்அறியாதபோது, எனது கீழாடை கரண்டைக் காலுக்கு கீழாக தரையில் படுகிறது என்று கூறினார் கள். நீர் பெருமைக்காக அணிபவரல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

My childhood experience



When I was in grade six (2003), a group of my friends decided to publish a magazine. We named it "AAMBAL" which means LOTUS FLOWER. Really it was an unforgettable experience in my school life. And also we published three magazines successfully. now we plan to continue this magazine as a online one the works are still going...please make duwah for our effort on this.
 






உணர்வுகளும், நிகழ்வுகளும் எமது அடிப்படைகளை மறக்கடித்துவிடக்கூடாது.


முக்கியத்துவம் கூடிய விடயங்களுக்கு குறைந்த முக்கியத்துவமும், ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களுக்கு கூடிய முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.

பள்ளிவாசல் தொடர்பாக யாரும் தவறாக பேசினால், மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால், அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடிய பள்ளியுடன் நாம் எவ்வளவு தொடர்பாக இருக்கிறோம் என்பதை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எமது சுபஹு தொழுகையுடைய நிலை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

ஹலால் சின்னம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறோம். வட்டி, சீதனம், அடகு, கடமையான ஸகாத்தை நிறைவேற்றாமல் சேர்க்கப்பட்ட பணம், ஊதியத்துக்கு குறைந்த வேலை பார்த்து பெறப்பட்ட சம்பளம், இவைகளை சீர்தூக்கிப்பார்த்து இதிலுள்ள ஹராம்களை பற்றி நாம் பெரிதாக வருந்துவதாக இல்லை.

பேசச் சொன்னால், அல்-குர்ஆன் பேசுகின்ற பெரும் பெரும் சிந்தனைகளை பேசுகின்றோம். அல்-குர்ஆனை கொடுத்து கொஞ்சம் இதனை தஜ்வீத் முறைப்படி ஓதுங்கள் என்றால், கூனிக்குறுகி விடுகிறோம்.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக யாரும் பேசினால் மிகவுமே கோபப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை எம்மிடம் இல்லாததை எண்ணி நாம் எம்மையே கோபப்படுவதில்லை.

இமாம் அபூஹனீபா அவர்களுடைய வீட்டுக்குப்பக்கத்திலே வசித்துவந்த ஒரு யூதர், அவருடைய வீட்டை விற்கும் போது பெரும் விலையைக் கூறினார். பெரும் விலையை இந்த வீட்டுக்கு சொல்கின்றீர்கள் என்று யாரும் கேட்டால், இந்த வீட்டின் பெறுமதி குறைவுதான் ஆனால் இமாம் அபூஹனீபாவை அயல் வீட்டுக்காரராக பெறுவதென்றால் நீங்கள் இந்த வீட்டைத் தான் வாங்க வேண்டும் என்று சொல்வார் (ஆதாரபூர்வமான தகவலா என்பது பற்றி தெரியவில்லை)

மேலும்,
இப்ன் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், "பாவத்தினுடைய ஒரு இயல்பு தான் அடுத்த மனிதர்களின் உள்ளங்களில் அது எம்மீதான வெறுப்பை உண்டு பண்ணும்"

எனவே எமது தனிப்பட்ட வாழ்க்கையை நாம் சுயவிசாரணை செய்துகொள்வது தான் எமது முதன்மையான தேவையாக இருக்கின்றது. அது சீராகிவிட்டால், அல்லாஹ்வுடைய உதவியை பெறுவதற்கு தகுதியானவர்களாக நாம் மாறிவிடுவோம்.

அல்லாஹ் எமது எண்ணங்களை பொருந்திக் கொள்வானாக. காற்றை பொதுவாக்கியது போல், ஹிதாயத்தையும் எல்லோருக்கும் பொதுவாக்குவானாக!